மனதிலே உள்ள எல்லாம்
வாயிலே வடிவதாலே
அளப்பரும் துன்பம் சேரும்
அனுபவம் கண்டு கொண்டேன்
மறைப்பினை நீக்கி நெஞ்சு
மடையினை திறத்தல் போல
உறைப்பொடு காரம் சேர
உள்ளதை உளறி வைத்தேன்
விருப்போடு கேட்பரேனும்
வெறுப்புடன் நோக்குவாரும்
நினைப்பதை பற்றி நானும்
நினைத்துமே பார்ப்பதில்லை !
உள்ளது எல்லாம் உளறும்
ஓட்டை வாய் என்று பலரும்
வள்ளல் போல் தந்த பட்டம்
வாங்கலால் பட்டதாரி !
கண்டதை பேசி நாட்டில்
கலகத்தை உண்டு பண்ணில்
தண்டனை என்று சொல்ல
தாழினை பூட்டிக் கொண்டேன் !
26.05.2000
Wednesday, March 12, 2008
உதுவும் treatment ஓ?
தினமும் நான் உன்னை நினைப்பதும்
தெருவில் விழி வைத்து கிடப்பதும்
மனதில் கலக்கங்கள் வருவதும்
மடியின் சுகம் பெற திரிவதும்
பெடியன் மெலியுறான் எனவுமே- முட்டைப்
பொரியல் அம்மா தருவதும் ...
அடியேன் மனதிலே கவலைகள்
அடியே உனக்கது தெரியுமோ ?
கனவில் பல மணி களித்தலும் -நான்
Chunningham படிப்பதை நிறுத்தலும்
உணவில் விருப்பினை குறைத்தலும் -வாய்
உளறி கதையினை உரைத்தலும்
விசரன் என பலர் சொல்கிறார்
விடை நீ தருவதில் தயக்கம் ஏன் ?
வருத்தம் சிலதுக்கு மருந்துகள்
வழங்கும் அவசியம் இல்லையோ ?
01.12.2000
தெருவில் விழி வைத்து கிடப்பதும்
மனதில் கலக்கங்கள் வருவதும்
மடியின் சுகம் பெற திரிவதும்
பெடியன் மெலியுறான் எனவுமே- முட்டைப்
பொரியல் அம்மா தருவதும் ...
அடியேன் மனதிலே கவலைகள்
அடியே உனக்கது தெரியுமோ ?
கனவில் பல மணி களித்தலும் -நான்
Chunningham படிப்பதை நிறுத்தலும்
உணவில் விருப்பினை குறைத்தலும் -வாய்
உளறி கதையினை உரைத்தலும்
விசரன் என பலர் சொல்கிறார்
விடை நீ தருவதில் தயக்கம் ஏன் ?
வருத்தம் சிலதுக்கு மருந்துகள்
வழங்கும் அவசியம் இல்லையோ ?
01.12.2000
Subscribe to:
Posts (Atom)