Thursday, May 8, 2008

இயற்கை இதம்

தூரத்தில் இருந்தாலும் நிலவு
சுகத்தை தான் தருகிறது
அருகில் இருப்பவர்கள் என்
அடித்துக் கொள்கிறார்கள்?

கதைக்கும் போது காற்று
என்னால் நன்கு கஷ்டப் படுகிறது - ஆனால்
தென்றல் என்னை கோபித்ததே இல்லை !

எத்தனை பேரை பார்த்திருந்தாலும்
Seniority கொண்டாடாத இறைவன் ...
எனக்குப் பிடித்திருக்கிறது !

யாருக்காகவோ பூக்கள் பூக்கின்றன
நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன்
வண்டுகளுக்கு வழிவிட்டு !

அழகுக்காக எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
அழகு என்பது என்ன?
அது என் ஆராய்ச்சி!

மாலை நேர வானம்
வர்ணங்களின் கோலம்
மாயை என்கிறார்கள்
என்றாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது !

குளிக்கும் போது பார்ப்பதில்
எவ்வளவு சந்தோசம்
சூரியன் கடலில்!

நட்சத்திர பெண்கள் கண் சிமிடிக் கொண்டிருக்கிறார்கள்
விடிந்த பிறக்கும் கூட!
எனக்கு தெரியவில்லை !

மழைத் துளியை பார்த்திருக் கிறீர்களா?
அதன் குண்டான கன்னங்கள்
எனக்கு விருப்பம் !

மழையில் நனைந்ததால் காய்ச்சல் வரும்
சின்ன வயதில் டீச்சர் சொல்லித் தந்தவ !

இலங்கை படம் கீறுகிற உழுவான்
எனக்கு அப்போது அட்சர ரேகை பற்றி
தெரியாது !

எறும்பு உடலில் ஊரும் போது
வருகிற கூச்சம்
நான் எறும்பை தட்டுவதில்லை
பாதை தடையால்
பாதிக்கப் பட்டவன் நான்!

குடிக்கும் நேரத்தை தவிர
சுருட்டி வைத்து கொள்கிறது
வண்ணத்துப் பூச்சி
என்னால் மட்டும் முடியுதில்லை !


10.02.2001

No comments: