Tuesday, August 12, 2008

என் காது பறந்ததடி !

கந்தனது தம்பியின்வாய்
கண்டபடி கதைக்கும்-அதை
கந்தலின்றிக் கேட்டவர்கள்
காது ரொம்ப புளிக்கும்!

முந்திவரு கோபம் வர
மூளவொரு சண்டை-என்
முந்தலிலே தொடங்குவதா?-ஓம்
மூண்டதுவே சண்டை!

வந்தவர்கள் போனவர்கள்
வந்துநின்று பார்த்தார்
வாய்மொழியின் வேகத்திலே
வார்த்தைகளைச் சேர்த்தார்

தீர்ப்பதற்கு நான்புகுந்து
திருத்திவிடப் பார்த்தேன்
தீயவர்கள் வாய்க்கடியால்
தீர்ந்தது என் காது!

சண்டை ஒன்று கண்டால்யாரும்
தப்பும் வழி கண்டு-அதைத்
தள்ளி நின்று பார்ப்பதுதான்
ரொம்ப ரொம்ப நன்று!

குருபரன்

No comments: