Tuesday, August 12, 2008

விடை கொடு பல்கலையே!

இத்தனை நாள் எமைக்காத்து
ஈன்றவளே விடைகொடம்மா
முத்தியபின் உதிர்வதெல்லாம்
முன்பெல்லாம் நடந்ததுதான்!
பத்தினியாய் எமைவைத்துப்
பார்த்தவளே,இங்குவந்து
சத்தனைத்தும் பெற்றுயர்ந்தோம்
தந்ததவைக்கு நன்றியடி!

வாசிகசாலை தவிரவேறெதற்கும்
வந்ததில்லை என்றுசொல்லி
பேசுவாள் என்தோழி,
பின்னாளில் ளுவழநெ டிநnஉh இல்
ஆசைக்கு வந்திருக்காத
ஆளென்று எனைத்திட்டும்
வாசகர் நீர்மகிழ இன்றே
வந்தமர்வேன் கல்லணையில்!!


வளர்ந்த மரங்கண்டறிந்த
வரலாறு நூறிறிந்தும் இதனடியில்
வளர்ந்த எங்களை இவை
மறக்காமல் வைத்திருக்கும!;
தளர்ந்திருந்த வேளையிலே
தன்னடியில் உறுதிதந்து
வளங்கொழித்த எம்பீட
வாழ்வென்றும் மறக்காதே!!!

No comments: