Wednesday, August 13, 2008

ஒரு விண்ணப்பம்

செக்கல் வான வண்ணங்கொண்ட சிலையே கேளடி நீ
செல்லும் பாதை வழியைப்பார்த்து இங்கே நானடி
சிக்கலுற்ற நூற் பந்துபோல வாழலாகுமோ? –உன்
சிந்தனைக்கு தந்த எந்தன் காதல் வாழுமோ?

வேண்டும் வேண்டும் என்று சொல்லி மனது துடிக்குது
வேண்டாம் என்று சொல்லும் உன்னைக் கவிதை வடிக்குது
மீண்டும் மீண்டும் சுருங்கி விரியும் இதயம் போலவே – உன்
வீட்டு வாசல் வந்து போவேன் உன்னைக் காணவே!


பைத்தியங்கள் என்று நீயோ பழித்துப் பேசுறாய் - அதுவும்
பாவம் என்று இரக்கம் கொள்ள ஏனோ மறுக்கிறாய்?
வைத்தியங்கள் ஏதுமில்லை இந்த வருத்தத்தில்- மாறி
வாழுகின்ற ஆசையுண்டு உன் தாலிப் பொருத்தத்தில்!


கி.குருபரன்

No comments: