Wednesday, August 13, 2008

துன்பம் போன்றதோர் இன்பம்

பாவை போன்றதோர் பாவை- நான்
பாடித் திரிவது அவள் பார்வை
சாலைக் கருநிறக்கூந்தல்- அசைந்
தாட மயங்கிடும் ஏந்தல்

சீவித் தெறித்ததா தோள்கள்?- கனல்
சீறும் கண்களோ வாட்கள்!
கூவும் குரலதும் குயிலே-உன்
கூட வருவதார் மயிலே!

முத்து நிறத்திலே பற்கள்- சாயம்
முற்றும் உதடுகள் விற்கள்
நித்தம் ஒருநிறச் சட்டை- நெற்றி
நீறு பூசினாய் பட்டை!

என்ன விலையெனக் கேட்டாய் மாலை
ஏந்திக் கோயிலினுள் போட்டாய்
தன்னந் தனியனாய் பார்க்கும்- எனைச்
சற்றுத் திரும்பியே காப்பாய்!

கி.குருபரன்

No comments: