tag:blogger.com,1999:blog-80432925789993193412024-02-20T13:40:28.518-08:00பல்கலை கழக கால கவிதைகள்The articles during my university periodகிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-10862685932316468982008-10-16T00:26:00.000-07:002008-10-16T00:27:13.058-07:00தாங்க முடியாத சாவு!யாரதும் உதவியின்றித் தானாக வளர்ந்த மரம்<br />நேர் வெயில் தாங்கிக் கீழே நிழலாக நின்ற மரம்<br />ஊரது வாழவென்று ஓரமாய் நின்று கீழே<br />தேரென இடுப்பு விரிந்து தெருக்காட்சி தந்த மரம்<br /><br />இரவில் மனிதன் வந்து இவளது மறைவில் நின்று<br />களவிலே சிறுநீர் கழித்தும் காக்கைகள் எச்சமிட்டும்<br />அருகிலே குப்பையாக்கி அருவருப்புச் செய்த போதும்<br />பொறுமையே பதிலாய்க் கொண்டு போதியை வென்ற மரம்!<br /><br />நீரினை எங்கே காண? நிலத்திலே தானே சென்று<br />வேரினை நீட்டி வேட்கையில் தேடியபோது<br />தாரது போட்டு நிரவி தடுத்தானே மனிதன் நீரை!<br />ஆரிடம் சொல்லி அழவோ? ஆழமாய் வேருமில்லை!<br /><br />பல்லினைக் கடித்து கடித்து பார்த்தது மரமும் ஈற்றில்<br />மெல்லவே பொறுமை எல்லை மீறவே கோபமாகி<br />சள்ளெனச் சத்தமிட்டு சரிந்தது தற்கொடைத் தாக்கு<br />உள்ளேதான் மாட்டுப் பட்டு உடைந்தது மனிதன் பொருளே!<br /><br />31.05.2006கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-47873252555344979662008-08-13T21:51:00.000-07:002008-08-13T21:52:17.345-07:00துன்பம் போன்றதோர் இன்பம்பாவை போன்றதோர் பாவை- நான் <br />பாடித் திரிவது அவள் பார்வை<br />சாலைக் கருநிறக்கூந்தல்- அசைந்<br />தாட மயங்கிடும் ஏந்தல்<br /><br />சீவித் தெறித்ததா தோள்கள்?- கனல்<br />சீறும் கண்களோ வாட்கள்!<br />கூவும் குரலதும் குயிலே-உன்<br />கூட வருவதார் மயிலே!<br /><br />முத்து நிறத்திலே பற்கள்- சாயம்<br />முற்றும் உதடுகள் விற்கள்<br />நித்தம் ஒருநிறச் சட்டை- நெற்றி<br />நீறு பூசினாய் பட்டை!<br /><br />என்ன விலையெனக் கேட்டாய் மாலை<br />ஏந்திக் கோயிலினுள் போட்டாய்<br />தன்னந் தனியனாய் பார்க்கும்- எனைச்<br />சற்றுத் திரும்பியே காப்பாய்!<br /><br />கி.குருபரன்கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-42760772249167811732008-08-13T21:46:00.000-07:002008-08-13T21:51:12.377-07:00ஒரு விண்ணப்பம்செக்கல் வான வண்ணங்கொண்ட சிலையே கேளடி நீ<br />செல்லும் பாதை வழியைப்பார்த்து இங்கே நானடி<br />சிக்கலுற்ற நூற் பந்துபோல வாழலாகுமோ? –உன்<br />சிந்தனைக்கு தந்த எந்தன் காதல் வாழுமோ?<br /><br />வேண்டும் வேண்டும் என்று சொல்லி மனது துடிக்குது<br />வேண்டாம் என்று சொல்லும் உன்னைக் கவிதை வடிக்குது<br />மீண்டும் மீண்டும் சுருங்கி விரியும் இதயம் போலவே – உன் <br />வீட்டு வாசல் வந்து போவேன் உன்னைக் காணவே!<br /><br /><br />பைத்தியங்கள் என்று நீயோ பழித்துப் பேசுறாய் - அதுவும்<br />பாவம் என்று இரக்கம் கொள்ள ஏனோ மறுக்கிறாய்?<br />வைத்தியங்கள் ஏதுமில்லை இந்த வருத்தத்தில்- மாறி<br />வாழுகின்ற ஆசையுண்டு உன் தாலிப் பொருத்தத்தில்!<br /><br /><br />கி.குருபரன்கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-24138936390264979452008-08-12T00:26:00.000-07:002008-08-12T00:28:33.599-07:00வாழ்வின் எல்லை வரை வேண்டும் !கற்றிருந்தோம் பள்ளியிலே ,கடினம் கண்டும்<br />களைப்பறியா எழுச்சியினைக் கற்றுக்கொண்டோம்<br />சுற்றி நிதம் வீதிகளைச் சுற்றி வந்தோம்-தெருச்<br />சுந்தரிகள் சிரிப்பினிலே சொக்கிச் சென்றோம்.<br /><br />பள்ளிதனில் படிப்பதற்குச் சென்றோம் அங்கு மதில்<br />பாய்வதிலும் பெயரெடுத்த பயல்கள் ஆனோம்.<br />உள்ளதெல்லாம் நெய்து பல உணர்வுகொண்டோம்-எம்<br />ஊரினிலே நல்லவராய்க் காட்டிக் கொண்டோம்.<br /><br />நண்பர்களே எங்களது ராஜா ராணி-<br />நாட்டிலுள்ள குடிகளதும் அவர்கள் தானே!<br />கண்ணசைக்க கதைமுடிக்கும் எங்கள் கோஷ்டி<br />கண்டவர்கள் நொல்லிடுவர் இதற்குச் சாட்சி!<br /><br />இந்துவிலே வாழுங்காலம் இதயம் முட்டும்<br />இன்பங்களும் நெஞ்சினிலே கோடி எட்டும்<br />பந்தெறியின் சுவரடித்து பாதை மீளும்-நாமும்<br />பார்த்திருந்தோம் பள்ளி வாழ்வு என்று மீளும்????!<br /><br />2000கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-13303580578739748012008-08-12T00:09:00.000-07:002008-08-12T00:15:25.386-07:00விடை கொடு பல்கலையே!இத்தனை நாள் எமைக்காத்து <br />ஈன்றவளே விடைகொடம்மா <br />முத்தியபின் உதிர்வதெல்லாம்<br /> முன்பெல்லாம் நடந்ததுதான்!<br />பத்தினியாய் எமைவைத்துப் <br />பார்த்தவளே,இங்குவந்து<br />சத்தனைத்தும் பெற்றுயர்ந்தோம்<br />தந்ததவைக்கு நன்றியடி!<br /><br />வாசிகசாலை தவிரவேறெதற்கும் <br />வந்ததில்லை என்றுசொல்லி<br />பேசுவாள் என்தோழி, <br />பின்னாளில் ளுவழநெ டிநnஉh இல்<br />ஆசைக்கு வந்திருக்காத <br />ஆளென்று எனைத்திட்டும்<br />வாசகர் நீர்மகிழ இன்றே <br />வந்தமர்வேன் கல்லணையில்!!<br /><br /><br />வளர்ந்த மரங்கண்டறிந்த <br />வரலாறு நூறிறிந்தும் இதனடியில்<br />வளர்ந்த எங்களை இவை <br />மறக்காமல் வைத்திருக்கும!;<br />தளர்ந்திருந்த வேளையிலே<br /> தன்னடியில் உறுதிதந்து<br />வளங்கொழித்த எம்பீட <br />வாழ்வென்றும் மறக்காதே!!!கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-82424853660342548532008-08-12T00:04:00.000-07:002008-08-12T00:08:13.476-07:00என் காது பறந்ததடி !கந்தனது தம்பியின்வாய்<br />கண்டபடி கதைக்கும்-அதை<br />கந்தலின்றிக் கேட்டவர்கள்<br />காது ரொம்ப புளிக்கும்!<br /><br />முந்திவரு கோபம் வர<br />மூளவொரு சண்டை-என்<br />முந்தலிலே தொடங்குவதா?-ஓம்<br />மூண்டதுவே சண்டை!<br /><br />வந்தவர்கள் போனவர்கள்<br />வந்துநின்று பார்த்தார்<br />வாய்மொழியின் வேகத்திலே<br />வார்த்தைகளைச் சேர்த்தார்<br /><br />தீர்ப்பதற்கு நான்புகுந்து<br />திருத்திவிடப் பார்த்தேன்<br />தீயவர்கள் வாய்க்கடியால்<br />தீர்ந்தது என் காது!<br /><br />சண்டை ஒன்று கண்டால்யாரும்<br />தப்பும் வழி கண்டு-அதைத்<br />தள்ளி நின்று பார்ப்பதுதான்<br />ரொம்ப ரொம்ப நன்று!<br /><br />குருபரன்கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-38219007342390083302008-07-04T02:29:00.000-07:002008-07-04T02:31:14.872-07:00வாணி விழா கவி அரங்குஇங்கே சென்று பாருங்கள் ( கீழே உள்ள முகவரியை கிளிக் பண்ணுங்கள் )<br /><a href="http://kaviarangu.blogspot.com/">http://kaviarangu.blogspot.com/</a>கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-32807628318559468732008-05-08T23:05:00.000-07:002008-05-08T23:25:45.916-07:00எதிர்பார்ப்புbroad ligament பார்ப்பம் எனப் போனேன்<br />போம் ஐ சே male body இது என்றாய்<br />vas diferens காட்டு என் கேட்க -சும்மா<br />வாரும் இது female என சொன்னாய்<br /><br />axilla வை பார்த்தபடி நிற்க நீயோ<br />accessory nerve இன் course கேட்டாய்<br />breast lobe இல் மினக்கெட்டு வாழ்வை<br />வீணாக்கிப் போட்டன் என சொன்னாய்<br /><br />testis இல்லா scrotum போல மூளை<br />சூனியமாய் இருக்கிறது கண்ணே<br />spincter இல்லா bladder போல - ஞானம்<br />தேக்கம் இல்லை மனதின் உள்ளே காணோம்<br /><br />pect major போலிருப்பாய் எதிர் பார்த்தேன்<br />platisma போல எல்லோ ஆனாய்<br />atropyஆவதுவா என் வாழ்க்கை<br />ஆரணங்கே காட்டு உன் heart ஐ ! <br /><br /><span class=""></span>2001கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-41110629917702597312008-05-08T22:38:00.000-07:002016-01-05T04:29:42.930-08:00இயற்கை இதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தூரத்தில் இருந்தாலும் நிலவு <br />
சுகத்தை தான் தருகிறது <br />
அருகில் இருப்பவர்கள் என் <br />
அடித்துக் கொள்கிறார்கள்?<br />
<br />
கதைக்கும் போது காற்று <br />
என்னால் நன்கு கஷ்டப் படுகிறது - ஆனால் <br />
தென்றல் என்னை கோபித்ததே இல்லை !<br />
<br />
எத்தனை பேரை பார்த்திருந்தாலும் <br />
Seniority கொண்டாடாத இறைவன் ...<br />
எனக்குப் பிடித்திருக்கிறது !<br />
<br />
யாருக்காகவோ பூக்கள் பூக்கின்றன <br />
நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன் <br />
வண்டுகளுக்கு வழிவிட்டு !<br />
<br />
அழகுக்காக எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் <br />
அழகு என்பது என்ன? <br />
அது என் ஆராய்ச்சி!<br />
<br />
மாலை நேர வானம் <br />
வர்ணங்களின் கோலம் <br />
மாயை என்கிறார்கள் <br />
என்றாலும் <br />
மகிழ்ச்சியாக இருக்கிறது !<br />
<br />
குளிக்கும் போது பார்ப்பதில் <br />
எவ்வளவு சந்தோசம் <br />
சூரியன் கடலில்!<br />
<br />
நட்சத்திர பெண்கள் கண் சிமிடிக் கொண்டிருக்கிறார்கள் <br />
விடிந்த பிறக்கும் கூட!<br />
எனக்கு தெரியவில்லை !<br />
<br />
மழைத் துளியை பார்த்திருக் கிறீர்களா? <br />
அதன் குண்டான கன்னங்கள் <br />
எனக்கு விருப்பம் !<br />
<br />
மழையில் நனைந்ததால் காய்ச்சல் வரும்<br />
சின்ன வயதில் டீச்சர் சொல்லித் தந்தவ !<br />
<br />
இலங்கை படம் கீறுகிற உழுவான் <br />
<span class="">எனக்கு அப்</span>போது அட்சர ரேகை பற்றி <br />
தெரியாது !<br />
<br />
எறும்பு உடலில் ஊரும் போது <br />
வருகிற கூச்சம் <br />
நான் எறும்பை தட்டுவதில்லை <br />
பாதை தடையால் <br />
பாதிக்கப் பட்டவன் நான்!<br />
<br />
குடிக்கும் நேரத்தை தவிர <br />
சுருட்டி வைத்து கொள்கிறது <br />
வண்ணத்துப் பூச்சி <br />
என்னால் மட்டும் முடியுதில்லை !<br />
<br />
<br />
10.02.2001 </div>
கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-73877530995873255942008-03-12T23:02:00.000-07:002008-03-12T23:14:22.477-07:00ஓட்டை வாய்மனதிலே உள்ள எல்லாம்<br />வாயிலே வடிவதாலே<br /><span class="">அளப்பரும் துன்பம் </span>சேரும்<br />அனுபவம் கண்டு கொண்டேன்<br /><br />மறைப்பினை நீக்கி நெஞ்சு<br />மடையினை திறத்தல் போல<br />உறைப்பொடு காரம் சேர<br />உள்ளதை உளறி வைத்தேன்<br /><br />விருப்போடு கேட்பரேனும்<br />வெறுப்புடன் நோக்குவாரும்<br /><span class="">நினைப்பதை பற்றி நானும் </span><br /><span class="">நினைத்துமே பார்ப்பதில்லை </span>!<br /><br />உள்ளது எல்லாம் உளறும்<br /><span class="">ஓட்டை வாய் என்று பலரும் </span><br /><span class="">வள்ளல் போல் தந்த பட்டம் </span><br />வாங்கலால் பட்டதாரி !<br /><br />கண்டதை பேசி நாட்டில்<br />கலகத்தை உண்டு பண்ணில்<br />தண்டனை என்று சொல்ல<br />தாழினை பூட்டிக் கொண்டேன் !<br /><br />26.05.2000கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8043292578999319341.post-75423966757672992322008-03-12T22:07:00.000-07:002018-07-24T19:41:18.254-07:00உதுவும் treatment ஓ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தினமும் நான் உன்னை நினைப்பதும்<br />
தெருவில் விழி வைத்து கிடப்பதும்<br />
மனதில் கலக்கங்கள் வருவதும்<br />
மடியின் சுகம் பெற திரிவதும்<br />
<br />
பெடியன் மெலியுறான் எனவுமே- முட்டைப்<br />
பொரியல் அம்மா தருவதும் ...<br />
அடியேன் மனதிலே கவலைகள்<br />
அடியே உனக்கது தெரியுமோ ?<br />
<br />
கனவில் பல மணி களித்தலும் -நான்<br />
Chunningham படிப்பதை நிறுத்தலும்<br />
உணவில் விருப்பினை குறைத்தலும் -வாய்<br />
உளறி கதையினை உரைத்தலும்<br />
<span class=""></span><br />
<span class="">விசரன் என பலர் சொல்கிறார் </span><br />
<span class="">விடை நீ தருவதில் தயக்கம் ஏன் ?</span><br />
<span class="">வருத்தம் சிலதுக்கு மருந்துகள் </span><br />
<span class="">வழங்கும் அவசியம் இல்லையோ ?</span> <br />
<br />
01.12.2000</div>
கிருஷ்ணபிள்ளை குருபரன்http://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.com0