Friday, July 4, 2008

வாணி விழா கவி அரங்கு

இங்கே சென்று பாருங்கள் ( கீழே உள்ள முகவரியை கிளிக் பண்ணுங்கள் )
http://kaviarangu.blogspot.com/

Thursday, May 8, 2008

எதிர்பார்ப்பு

broad ligament பார்ப்பம் எனப் போனேன்
போம் ஐ சே male body இது என்றாய்
vas diferens காட்டு என் கேட்க -சும்மா
வாரும் இது female என சொன்னாய்

axilla வை பார்த்தபடி நிற்க நீயோ
accessory nerve இன் course கேட்டாய்
breast lobe இல் மினக்கெட்டு வாழ்வை
வீணாக்கிப் போட்டன் என சொன்னாய்

testis இல்லா scrotum போல மூளை
சூனியமாய் இருக்கிறது கண்ணே
spincter இல்லா bladder போல - ஞானம்
தேக்கம் இல்லை மனதின் உள்ளே காணோம்

pect major போலிருப்பாய் எதிர் பார்த்தேன்
platisma போல எல்லோ ஆனாய்
atropyஆவதுவா என் வாழ்க்கை
ஆரணங்கே காட்டு உன் heart ஐ !

2001

இயற்கை இதம்

தூரத்தில் இருந்தாலும் நிலவு
சுகத்தை தான் தருகிறது
அருகில் இருப்பவர்கள் என்
அடித்துக் கொள்கிறார்கள்?

கதைக்கும் போது காற்று
என்னால் நன்கு கஷ்டப் படுகிறது - ஆனால்
தென்றல் என்னை கோபித்ததே இல்லை !

எத்தனை பேரை பார்த்திருந்தாலும்
Seniority கொண்டாடாத இறைவன் ...
எனக்குப் பிடித்திருக்கிறது !

யாருக்காகவோ பூக்கள் பூக்கின்றன
நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன்
வண்டுகளுக்கு வழிவிட்டு !

அழகுக்காக எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
அழகு என்பது என்ன?
அது என் ஆராய்ச்சி!

மாலை நேர வானம்
வர்ணங்களின் கோலம்
மாயை என்கிறார்கள்
என்றாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது !

குளிக்கும் போது பார்ப்பதில்
எவ்வளவு சந்தோசம்
சூரியன் கடலில்!

நட்சத்திர பெண்கள் கண் சிமிடிக் கொண்டிருக்கிறார்கள்
விடிந்த பிறக்கும் கூட!
எனக்கு தெரியவில்லை !

மழைத் துளியை பார்த்திருக் கிறீர்களா?
அதன் குண்டான கன்னங்கள்
எனக்கு விருப்பம் !

மழையில் நனைந்ததால் காய்ச்சல் வரும்
சின்ன வயதில் டீச்சர் சொல்லித் தந்தவ !

இலங்கை படம் கீறுகிற உழுவான்
எனக்கு அப்போது அட்சர ரேகை பற்றி
தெரியாது !

எறும்பு உடலில் ஊரும் போது
வருகிற கூச்சம்
நான் எறும்பை தட்டுவதில்லை
பாதை தடையால்
பாதிக்கப் பட்டவன் நான்!

குடிக்கும் நேரத்தை தவிர
சுருட்டி வைத்து கொள்கிறது
வண்ணத்துப் பூச்சி
என்னால் மட்டும் முடியுதில்லை !


10.02.2001

Wednesday, March 12, 2008

ஓட்டை வாய்

மனதிலே உள்ள எல்லாம்
வாயிலே வடிவதாலே
அளப்பரும் துன்பம் சேரும்
அனுபவம் கண்டு கொண்டேன்

மறைப்பினை நீக்கி நெஞ்சு
மடையினை திறத்தல் போல
உறைப்பொடு காரம் சேர
உள்ளதை உளறி வைத்தேன்

விருப்போடு கேட்பரேனும்
வெறுப்புடன் நோக்குவாரும்
நினைப்பதை பற்றி நானும்
நினைத்துமே பார்ப்பதில்லை !

உள்ளது எல்லாம் உளறும்
ஓட்டை வாய் என்று பலரும்
வள்ளல் போல் தந்த பட்டம்
வாங்கலால் பட்டதாரி !

கண்டதை பேசி நாட்டில்
கலகத்தை உண்டு பண்ணில்
தண்டனை என்று சொல்ல
தாழினை பூட்டிக் கொண்டேன் !

26.05.2000

உதுவும் treatment ஓ?

தினமும் நான் உன்னை நினைப்பதும்
தெருவில் விழி வைத்து கிடப்பதும்
மனதில் கலக்கங்கள் வருவதும்
மடியின் சுகம் பெற திரிவதும்

பெடியன் மெலியுறான் எனவுமே- முட்டைப்
பொரியல் அம்மா தருவதும் ...
அடியேன் மனதிலே கவலைகள்
அடியே உனக்கது தெரியுமோ ?

கனவில் பல மணி களித்தலும் -நான்
Chunningham படிப்பதை நிறுத்தலும்
உணவில் விருப்பினை குறைத்தலும் -வாய்
உளறி கதையினை உரைத்தலும்

விசரன் என பலர் சொல்கிறார்
விடை நீ தருவதில் தயக்கம் ஏன் ?
வருத்தம் சிலதுக்கு மருந்துகள்
வழங்கும் அவசியம் இல்லையோ ?

01.12.2000